பிரித்தானிய பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு

47
0
Spread the love

பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தமது பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இன்று (22) காலை லண்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.

தற்போது அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் அவர் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

தமது பதவி விலகல் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னதாக, தாங்கள் பொறுப்பேற்ற போது தொழிற் கட்சி அரசியல் ரீதியாகவும், நிதி ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் வீழ்ச்சியடைந்திருந்தது என ஸ்டார்மர் கூறினார்.

தமக்குத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் கட்சி முடிந்துவிட்டது என்றே கூறப்பட்டதாகவும், ஆனால் அவர்களைத் தாம் தவறென நிரூபித்துக் காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யூத எதிர்ப்பு என்ற நச்சுத்தன்மையை வேரோடு பிடுங்கி எறிந்ததன் மூலம் கட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறினார்.

பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான நம்பிக்கையை தாம் மீண்டும் கட்டியெழுப்பியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தாம் பதவி விலகும் தீர்மானத்தை மன்னருக்கு அறிவிப்பதற்காக, இன்று காலை அவரிடம் உரையாடியதாகக் குறிப்பிட்டார்.

தொழிற் கட்சியின் தேசிய நிறைவேற்றுக்குழுவிடம், தலைமைத்துவத்திற்கான வேட்புமனுக்களை ஜூலை 9 ஆம் திகதி திறந்து, கோடை விடுமுறைக்கு முன்னதாகவே அவற்றை முடித்துவிடுமாறும் ஒரு கால அட்டவணையைத் தயாரிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன் மூலம், செப்டம்பர் மாதம் பாராளுமன்றம் மீண்டும் கூடும் போது, புதிய தலைவர் பதவியேற்றிருப்பார்.

அதுவரை தாம் பிரதமர் பதவியில் நீடிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here