இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமனம்

95
0
Spread the love

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன் (Gary Kirsten) நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த நியமனம் 2026 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இரண்டு ஆண்டுகள் அந்தப் பதவியில் நீடிப்பார்.

கேரி கிர்ஸ்டன் இதற்கு முன்னர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக (2008-2011) பணியாற்றி, 2011 இல் இந்திய அணி உலகக் கிண்ணத்தை வெல்ல வழிகாட்டினார்.

மேலும், தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக (2011-2013) இருந்தபோது, அந்த அணியை அனைத்து வகையான போட்டிகளிலும் முதலிடத்திற்கு இட்டுச் சென்றார்.

2026 ஐசிசி (ICC) ஆண்கள் டி20 உலகக் கிண்ணத்தின் போது நமீபியா கிரிக்கெட் அணியின் ஆலோசகராகப் பணியாற்றினார்.

1993 முதல் 2004 வரையிலான தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 14,087 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 21 டெஸ்ட் சதங்களும் 13 ஒருநாள் சதங்களும் அடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here