சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டம்

54
0
Spread the love

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பொலிஸாரால் விசேட பாதுகாப்புத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள 608 பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வாகனச் சோதனைகள் உள்ளிட்ட வீதிப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 10,000க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here