ஈரான் – அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை

85
0
Spread the love

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா நன்நோக்கத்துடனே கலந்துகொண்டதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் 12 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையின் பின்னர், முதன்முறையாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு ஈரான் உடன்படவில்லை என்றும், இரு நாடுகளுக்கும் இடையில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் அணுஆயுதத் திறனைத் தடுப்பதே தமது பிரதான இலக்காகும் எனத் தெரிவித்த துணை ஜனாதிபதி, பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து அமெரிக்கத் தூதுக்குழுவினர் பாகிஸ்தானிலிருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராகச் செயற்பட்ட பாகிஸ்தானுக்கு அவர் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here