களனி ரயில் விபத்து – சந்தேகநபரின் வீட்டில் சிக்கிய உபகரணங்கள்

49
0
Spread the love

களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (16) காலை இடம்பெற்ற ரயில் விபத்தைத் தொடர்ந்து, குறித்த ரயில் பாதையின் ஆணிகளை கழற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வீட்டிலிருந்து பல உபகரணங்களைப் பொலிஸாரால் மீட்க முடிந்துள்ளது.

இதன்படி, சந்தேகநபர் வசித்து வந்த வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, ரயிலின் தண்டவாளங்களை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் 03 இரும்பு லீவர்கள் மற்றும் அவற்றைக் கழற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் வனவாசல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவராவார்.

பேலியகொடை தலைமையக பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் மங்கள அஜித் உள்ளிட்ட குழுவினரால் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here