இறுதிப் போரில் உயிர் நீத்த
உறவுகளை நினைவு கூருமுகமாக
“மே 18 முள்ளிவாய்க்கால் ‘ நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் (18.05) திங்கட்கிழமை காலை மன்னார் நகரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
பொது அமைப்புகளின் தலைவர் வி எஸ் சிவகரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நினைவேந்தல் நிகழ்வில் ,
பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு இறுதி யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியினையும் உணர்வுபூர்வமாக அருந்தி சென்றனர்.







