அமைச்சர் நலிந்த 79 ஆவது உலக சுகாதாரப் பேரவையில் உரை

49
0
Spread the love

உலக சுகாதார அமைப்பின் 79 ஆவது உலக சுகாதாரப் பேரவைக் கூட்டத்தொடர் நேற்று (18) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் ஆரம்பமானது.

உலக சுகாதார அமைப்பின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் கூட்டத்தொடரின் தலைவர் என்ற ரீதியிலும், இலங்கையின் சுகாதார அமைச்சர் என்ற ரீதியிலும் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இந்த வருட பேரவையில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

இதற்கமைய, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (19) 79 ஆவது உலக சுகாதாரப் பேரவையில் உரையாற்றினார்.

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் உலக சுகாதாரப் பேரவையை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன், இந்த நிகழ்வில் 194 உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள், ராஜதந்திரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த வருட பேரவையின் கருப்பொருள் “One world for Health”  என்பதாகும்.

இந்தக் கருப்பொருளின் கீழ், உலகளாவிய சுகாதார சவால்கள், தொற்றுநோய்களுக்கான தயார்நிலை மற்றும் உலகளாவிய சுகாதாரக் காப்பீடு குறித்த பல விவாதங்கள், பயிலரங்குகள், அமர்வுகள் மற்றும் விரிவுரைகள் நடத்தப்படவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here