கொழும்பிலிருந்து அருட் சகோதரிகளை ஏற்றி வந்த ஹையர்ஸ் ரக வாகனம் ஒன்று மன்னார் பறையனாலங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று (22.07) புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில்
விபத்துக்குள்ளானதில் அருட்சகோதரிகள் ஐவர் காயங்களுக்கு ள்ளான நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வானத்தை செலுத்திய சாரதி பறையனாலங்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்துக்கான காரணம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.







