நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலை யாகியுள்ளார் நிலுவையில் உள்ள விசாரணை தொடர்பாக வழங்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய, நாமல் ராஜபக்ச இன்று (21)காலை பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது இதன்போது
விசாரணையாளர்களிடம் அவர் வாக்குமூலம் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், விசாரணை தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.







