ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க ஜூலை முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று வெள்ளிக்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
விமானங்கள் கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைகளுக்கமைய நிஷாந்த விக்ரமசிங்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று
கைது செய்யப்பட்டார்.







