ஊவா மாகாண சபையின் உதவி விவசாயப் பணிப்பாளர் கைது

63
0
Spread the love

 

ஊவா மாகாண சபையின் உதவி விவசாயப் பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹல்துமுல்ல பகுதியிலுள்ள அரச காணியை கையகப்படுத்தி அங்கு நடுவதாகக் கூறி 4000 மாங்கன்றுகளை அரச நிதியில் கொள்வனவு செய்து அவற்றை விற்பனை செய்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அந்த திட்டத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் 2 அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டதுடன் சந்தேகநபர்களை இன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here