காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி

68
0
Spread the love

தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலியதேவபுர பகுதியில் நேற்று (03.07) காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவர் தனது நிலத்தில் யானைகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியின் மின்சாரத்தை துண்டிக்கச் சென்றபோது இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மலியதேவபுர, தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடல் தம்புத்தேகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக தம்புத்தேகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here