கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைத் தந்த நபர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் அவர் உயிரிழந்தததை அறிந்த உறவினர், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதன்பின்னர் அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
குறித்த நபரின் மூன்று பிள்ளைகளும் மனைவியும் கனடாவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







