ஜூலை மாதத்திற்கான முதியோர் உதவித்தொகை, தொடர்புடைய அஸ்வெசும பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் நாளை (29.07) வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய 06 இலட்சத்திற்கும் மேலான பயனாளர்களின் வங்கி கணக்கில் உதவித்தொகை வைப்பிலிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளர்கள் நாளை தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து உதவித் தொகையை பெற்றும்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.







