ஓகஸ்ட் மாதத்தில் பஸ் கட்டணத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (01.08) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படாத காரணத்தால், பஸ் கட்டணத்திலும் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை எனத் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.






