குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில்,
பல அரசியல்வாதிகள் நீதிமன்ற வளாகத்திற்கு வந்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அமைச்சர் தயா கமகே,
நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் நீதிமன்ற வளாகத்துக்கு வந்துள்ளனர்.
மேலும் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.







