முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றம், அவரது பிணை மனுவை நிராகரித்து, எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம பிறப்பித்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே சஷீந்திர ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.







