கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளார்.
அவர் இன்று வெள்ளிக்கிழமை (29.08) காலை சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டிருந்தார்.
ரணில் விக்ரமசிங்க கடந்த 23 ஆம் திகதி முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.







