விஜயின் திருச்சி பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு

81
0
Spread the love

தமிழகத்தின் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ளிட்ட 04 இடங்களில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் நடத்த திட்டமிட்டிருந்தார்.

ஆனால், தற்போது விஜயின் பிரச்சார கூட்டத்திற்கு பொலிஸார் அனுமதி மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் தொண்டர்களிடையே உரையாற்ற உள்ள நிகழ்வை சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பதில் திருச்சி மரக்கடை, உழவர் சந்தை பகுதியில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக
இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

திருச்சியை தொடர்ந்து அரியலூர், குன்னம், பெரம்பலூர் பகுதிகளில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here