அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிசிக்சைப் பெற்று வருகிறார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினர் ஒருவரே துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.







