வடக்கு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 31 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்தது.
இதன்படி, அவர்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






