தி.மு.க. அரசு மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை புதைந்து விட்டது என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக்கழக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இன்று உரையாற்றும்
போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இங்கு உரையாற்றிய விஜய் முதலமைச்சர் பேச்சில் மட்டும் தான் மனிதாபிமானம் உள்ளதென்றும் கூறியுள்ளார்.
1972 ஆம் ஆண்டகுபு் பிறகு கேள்வி கேட்க யாரும் இல்லாததால் தி.மு.க. தலைமை இப்படி மாறி விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இயற்கையும் இறைவனும் மக்கள் சக்தியாக எம்முடன் இருப்பார்கள் என தெரிவித்த விஜய்.
தற்போது ஏற்பட்டுள்ள இடையூறு தற்காலிகமானது என மேலும் தெரிவித்தார்.







