யாழில் 4 பிள்ளைகளின் தந்தை அடித்துக் கொலை

108
0
Spread the love

யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் இளைஞர்கள் இருவர் மேற்கொண்ட தாக்குதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புன்னாலைக் கட்டுவனில் உள்ள  கள்ளுத்தவறணை ஒன்றுக்கு அவர் கள்ளு அருந்தச் சென்றபோது, அங்கு கள்ளு அருந்திக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் நேற்று (20.11) மாலை, அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த குடும்பஸ்தர் முதலில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில்,  அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் 56 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here