திருகோணமலையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

124
0
Spread the love

திருகோணமலை, சீனன்குடா பகுதியில் நேற்று (01.12) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சீனன்குடா – 5 ஆம் கட்டை பகுதியைச் சேரந்த 59 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் குறித்து சீனன்குடா பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here