100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் – மூவர் படுகாயம்

138
0
Spread the love

சிவனொளிபாத மலை யாத்திரை சென்றுவிட்டு மீண்டும் அவிசாவளை நோக்கிப் பயணித்த, ஒரு குழுவினரை ஏற்றிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நோட்டன்பிரிட்ஜ் – லக்ஷபான பிரதான வீதியின் 3ஆம் மைல்கல் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் குறித்த வாகனத்தில் பயணித்த மூவர் பலத்த காயமடைந்து லக்ஷபான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்தினால் காருக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here