மின் கட்டண அதிகரிப்பு மார்ச் இறுதியில்?

84
0
Spread the love

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முடிவு இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படவுள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கு 13.56% மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு அனுமதி கோரி, இலங்கை மின்சார சபை அண்மையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிவொன்றைச் சமர்ப்பித்திருந்தது.

இது குறித்துப் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதன் மூன்றாம் நாளாக இன்று மாத்தளை மாவட்டத்தில் பொதுமக்களிடம் கருத்துக்கள் கோரப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here