08 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை

65
0
Spread the love

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 8 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 809,595 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் இந்தியப் பிரஜைகளாவர். அந்த எண்ணிக்கை 167,095 ஆகும்.

அத்துடன் பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 68,961 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இருப்பினும், இந்தத் தரவுகளை அவதானிக்கும் போது கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாகக் குறைந்துள்ளமை தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here