இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இரண்டு பிரதான பேரணிகளை நடத்தியுள்ளது.
வடக்கு மாகாண பேரணி முல்லைத்தீவு, மாங்குளத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண பேரணி, பட்டிப்பளையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது.
பட்டிப்பளையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய இராசமாணிக்கம் சாணக்கியன் , புதிய அரசியலமைப்பு கட்டமைப்பின் ஊடாக நிலையான அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மக்கள் தமது பாரம்பரிய வாழிடப் பிரதேசங்களை தாமே நிர்வகிக்கும் உரிமையை வழங்குவது, விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடைத் துறைகளில் நீண்டகாலமாக நிலவும் வாழ்வாதார சவால்களைத் தீர்ப்பதற்கு அத்தியாவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.






