பதுளை மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா

90
0
Spread the love

பதுளை மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் (NPP) நகர சபை உறுப்பினர் மஹிந்த குணசேகர தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட காரணம் நிமித்தமே அவர் இவ்வாறு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக, பதுளை மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் புதிய நகர சபை உறுப்பினராக ஜயசேன ரத்நாயக்க நேற்று (13) ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here