புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சப்ரகமுவ மாகாணம் தொடர்பான கலந்துரையாடல் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெறவுள்ளது.
இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் இன்று இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் சப்ரகமுவ மாகாண கல்வித் துறையில் பணிபுரியும் நிர்வாக அதிகாரிகள், அனைத்து கோட்டக் கல்வி பணிப்பாளர்கள், ஆசிரியர் பயிற்சி மையங்களில் பணிபுரியும் ஆசிரியர் கல்வியாளர்கள் மற்றும் அனைத்து பிராந்திய பொறியியலாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.







