ஐ.தே.க – ஐ.ம.ச இணைவது நன்மையே – நாமல்

192
0
Spread the love

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைவது நன்மை பயக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துரைத்துள்ள அவர், தாம் நீண்ட காலமாக ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் ஒற்றுமையை வலியுறுத்தி வருவதாக
தெரிவித்தார்.

அரசியல் மக்களைப் பிரிப்பதன் மூலம் நடத்தப்படக்கூடாது, அது வெறுப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் இன்னும் தொலைவில் உள்ள நிலையில், அரசாங்கம் முதலில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அழுத்தமான பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் தொடர்பான விஷயங்களில் கூட, புலம்பெயர்ந்தோரின் அழுத்தத்திற்கு அரசாங்கம் அடிபணிந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளைத் தவறாகக் கையாள்வதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கத்திற்குள் உள் மோதல்கள் இருப்பதாக வெளியான தகவல்கள் குறித்துக் கருத்துரைத்த, நாமல் ராஜபக்ஷ , வரலாற்றில் ஒவ்வொரு அரசாங்கமும் உள் மோதல்களால் வீழ்ச்சி கண்டன என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here