மாவட்ட ரீதியில் சாதனை படைத்த மன்னார் கருங்கண்டல் மகா வித்தியாலயம்

235
0
Spread the love

புலமைப்பரிசில் பரீட்சையில் பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில் மாவட்ட ரீதியில் மன்/ கருங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய மாணவன் ச.லெசோடரன் அதிகூடிய புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாவது நிலையை பெற்றுள்ளார்.

குறிப்பாக இம் முறை மன்/றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தின் 18 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் அவர்களில் 8 மாணவர்கள் வெட்டு புள்ளி க்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்று சித்தியடைந்துள்ளதுடன் 100 வீத சித்தியையும் பெற்றுள்ளனர்.

மன்/ கருங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய மாணவன் ச.லெசோடரன் 174 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here