தெலுங்கு சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரியங்கா மோகன். அமைதியான முக பாவணை, அழகான தோற்றம் ஆகியவற்றின் காரணமாக தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த சரிபோதா சனிவாரம் படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. ஆனால், தமிழில் வெளியான பிரதர் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
சிவகார்த்திகேயன் ஜோடியாக டாக்டர், சூர்யா ஜோடியாக எதற்கும் துணிந்தவன் என பல படங்களில் நடித்துள்ள இவர் தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார்.
தற்போது வெளிநாட்டுக்கு சென்றுள்ள பிரியங்கா, கடற்கரையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

















