திருகோணமலை கடற்பரப்பில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலையில் இருந்து வடகிழக்கே 60 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று (18.09) மாலை 4:06 அளவில் உணரப்பட்டதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.







