சமஷ்டி பற்றிய முக்கிய கலந்துரையாடல்

189
0
Spread the love

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல்முனைவின் 85 ஆம் நாளை முன்னிட்டு, இன்று (24.10) மெசிடோ நிறுவனத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தகலந்துரையாடல், முன்னாள் மற்றும் தற்போதைய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் முக்கிய பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

இதன்போது சமஷ்டி ஆட்சி முறைமை என்றால் என்ன, உலகத்தில் சமஸ்டி ஆட்சி முறைமையின் நடைமுறைகள்,
சமஸ்டி ஆட்சி முறைமையின் முக்கிய அம்சங்கள்மற்றும் சமஸ்டி ஆட்சி முறைமையின் வகைகள் போன்ற குறித்து
கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

அத்துடன் இலங்கைக்கு பொருத்தமான சமஷ்டி ஆட்சி முறைமை எது மற்றும் இலங்கையில் சமஸ்டி ஆட்சி முறைமையை உருவாக்க நாம் எவ்வாறு பங்களிக்கலாம் போன்றன குறித்தும் கலந்துரையால் இடம்பெற்றது.

இதன்போது பங்கேற்பாளர்கள் தமது கருத்துகள், கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பகிர்ந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடல் மூலம், வடக்கு மற்றும் கிழக்கின் மக்களுக்கு பொருத்தமான அரசியல் தீர்வை உருவாக்கும் நோக்கில் ஒருமித்த சிந்தனைகள் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here