பயணிகள் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி நாளை திங்கட்கிழமை (24.11) முதல் பேருந்து கட்டணங்களை செலுத்த முடியும்.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் செயற்படுத்தப்படும் இந்த திட்டம், மகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கூற்றுப்படி, இந்த திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் சுமார் 20 வழித்தடங்கள் உள்ளடக்கப்பட உள்ளன.







