மாத்தளை,அம்போக்கா கிராமத்தில் மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரின் சடலங்களை வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் கண்டுபிடித்துள்ளது.
கிராமத்தில் ஒரு வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் மண்சரிவினால் உயிரிழந்தனர்.
அந்த பகுதி இன்னும் முழுமையாக மண்ணால் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்களின் சடலங்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருந்த நேரத்தில், வீட்டில் இருந்த நாய் நிலத்தடியில் மறைந்திருந்த குடியிருப்பாளர்களைக் கண்டுபிடித்து பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.







