அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ் சிறைச்சாலை நிவாரணம்

161
0
Spread the love

டிட்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலை பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது.

இந்த உதவி பொருட்கள் அடங்கிய பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் இன்று (13.12) கையளிக்கப்பட்டன.

சிறைச்சாலை கைதிகள், தங்களது ஒரு நேர உணவுக்கான பொருட்களையும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களையும் உள்ளடக்கி 180 பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இணைந்து இந்த உதவிகளை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here