உரப் போக்குவரத்து கட்டணம் உயர்வு – விவசாயிகள் குற்றச்சாட்டு

27
0
Spread the love

சிறு போகத்திற்கான உரங்களை விநியோகிக்கும்போது, விவசாயிகளிடம் வசூலிக்கப்படும் போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதற்கு முன்னர் 50 ரூபாவாக இருந்த இந்தக் கட்டணம், தற்போது 300 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கொழும்பில் இருந்து விவசாய சேவை மையங்களுக்கு உரங்களைக் கொண்டு செல்வதற்காக விவசாயிகளிடம் இதுவரை வசூலிக்கப்பட்ட கட்டணமே இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது

அத்துடன், ஒரு மூடை உரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக விவசாய சேவை மையங்களினால் தற்போது 9,550 ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, போதுமான அளவு உரத்தை வழங்க முடியாதுள்ளதாக விவசாய பிரதிப் பணிப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். நெற்செய்கைக்காக ஒரு ஏக்கருக்கு 90 கிலோ கிராம் யூரியா இடப்பட வேண்டும் என விவசாயத் திணைக்களம் பரிந்துரைத்துள்ள பின்னணியிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

எனினும், பயிர்களுக்கு இட வேண்டிய உரம் இன்னும் முறையாகக் கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். அம்பாறை, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த சிறுபோக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டு தற்போது ஒரு மாதத்திற்கும் மேலாகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here