ஈரானை உலக வரைபடத்தில் இருந்து அகற்றும் நிலை உருவாகும் – ட்ரம்ப்

29
0
Spread the love

ஹோர்முஸ் நீரிணையிலோ அல்லது பாரசீக வளைகுடா பிராந்தியத்திலோ உள்ள அமெரிக்கக் கப்பல்களை இலக்கு வைக்க முயன்றால், ஈரானை உலக வரைபடத்திலிருந்து அகற்றும் நிலை உருவாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய தொலைபேசி நேர்காணலின் போது, அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் முன்னரை விட இப்போது நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னரும் ட்ரம்ப் இவ்வாறான அச்சுறுத்தல்களை விடுத்திருந்ததுடன், கடந்த மாதம் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஒரு முழு நாகரிகமே அழிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஹோர்முஸ் நீரிணை ஊடாக பயணிக்க முயன்ற கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அமெரிக்க இராணுவத்தால் ஏழு ஈரானிய படகுகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ட்ரம்ப் ‘ட்ரூத் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவது, மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பிப்பது ஆகிய இரண்டு தெரிவுகளே உள்ளதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here