சிறுவர்களின் சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்த புதிய சட்டமூலம்

9
0
Spread the love

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம், ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவினால் இன்று (24) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்படி, குறித்த சட்டமூலத்தை பைசர் முஸ்தபா பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார்.

சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களை அணுகுவதைக் கட்டுப்படுத்துவதும், தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதும் இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்தச் சட்டத்தின் மூலம், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகத் தளங்களை அணுகுவதைத் தடுப்பதற்கு, சம்பந்தப்பட்ட அமைச்சரான சிறுவர் விவகார அமைச்சருக்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் கிடைக்கிறது.

அத்துடன், ஒரு பிள்ளை ஒரு நாளில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக்கூடிய நேரத்தைச் சுருக்குவதற்கோ அல்லது பயன்படுத்துவதற்கான குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயிப்பதற்கோ இந்தச் சட்டத்தின் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கிறது.

இந்தச் சட்டத்தைச் செயற்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கீழ் அங்கீகாரம் பெற்ற ஆணையாளர் ஒருவரை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here