குடியேற்ற விண்ணப்பத்தை ஆதரித்தமை குறித்து வாய்திறந்த ஆனந்தசங்கரி

53
0
Spread the love

 

பயங்கரவாதக் குழு உறுப்பினரென கூறப்படும் ஒருவரின் குடியேற்ற விண்ணப்பத்தை ஆதரித்து கடிதங்கள் எழுதியபோது, தாம் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக மட்டுமே தமது கடமையைச் செய்ததாக, கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு கேரி ஆனந்தசங்கரி முதன்முறையாக பதிலளித்தார்.

முன்னதாக தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவரின் கனேடிய குடியுரிமை தொடர்பில் குடிவரவு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாக கெரி ஆனந்தசங்கரி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எனினும் அதனை ஏற்றுக்கொள்ளாத கனேடிய பிரதமரும் ஆனந்தசங்கரி மீதான குற்றச்சாட்டை நிராகரித்திருந்தார்.

இந்தநிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரதும் முக்கிய பொறுப்புகளில், உதவி கோருவோருக்கு சேவைகளை வழங்குவது என கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here