ஹம்பாந்தோட்டையில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனது தந்தையுடன் விவசாய நிலத்திற்கு சென்றிருந்த போது சிறுமி இன்று காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
தரம் 02 இல் கல்வி பயின்று வந்த 7 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காட்டு யானையின் தாக்குதலால் பலத்த காயமடைந்த அவரது தந்தையும் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.







