நெஞ்சில் டெட்டூ உடன் அஜித்

109
0
Spread the love

‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பின்னர் நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார்.

இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறது.

டுபாய், இத்​தாலி, ஸ்பெ​யின் நாடு​களில் நடை​பெற்ற ரேஸ்​களில் பங்​கேற்ற அவர் அணி,​பார்சிலோனாவில் நடந்த கார் பந்​த​யத்​தில் அண்மையில் பங்​கேற்​றது.

இந்த நிலையில் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள கோயிலில் நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் தரிசனம் செய்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களில் அஜித் தன் நெஞ்சில் டாட்டூ ஒன்றை வரைந்துள்ளார்.

கடவுள் படம் போல தோற்றமளிக்கும் அது உண்மையான டாட்டூதானா? அல்லது அடுத்த படத்துக்காக தற்காலிகமாக வரையப்பட்டதா என இரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here