ஹட்டன் பஸ் விபத்தில் ஒருவர் பலி 

6
0
Spread the love

ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியில் இன்று (29.04) பிற்பகல் இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்தோரில் ஒருவர் உயிரிழந்தார்.

அவர் காயமடைந்து சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் 70 வயதுடைய ஹட்டன் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

மேலும் காயமடைந்த 34 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன், ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பஸ் வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விபத்துக்குள்ளானது.

இவ்விபத்து இன்று (29) பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் ஹட்டன் – போடைஸ் வழியாக டிக்கோயா பட்டல்கல பகுதியில் இடம்பெற்றது.

மற்றொரு பஸ்ஸிற்கு வழிவிட முற்பட்டபோது, கட்டுப்பாட்டை இழந்த பஸ் வீதியிலிருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 17 ஆண்களும், 14 பெண்களும், 2 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பஸ்ஸில் சுமார் 40 பேர் பயணித்திருந்ததாகவும், சாரதியும், உதவியாளரும் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here