சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா நேற்று இதனை அறிவித்துள்ளார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் மீண்டும் பொருளாதாரப் பேராசிரியராக இணைவதற்காக கீதா கோபிநாத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது







