பலத்தமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் இறந்த ஒவ்வொருவருக்கும் 1 மில்லியன் ரூபா வழங்குமாறு ஜனாதிபதி நிதியத்திற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, இறந்தவர்களின் உறவினர்களுக்கு இந்த பணத்தை உடனடியாக வழங்க ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது.







