2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) காலை 9 மணிக்கு நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளது.
நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் இப்பரீட்சைக்கு 294,089 மாணவர்கள் தோற்றுகின்றனர் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைக்கு முன்னதாகவே மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தருமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியிருந்தது.
புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்.







